மலரும் கனவுகள்



8
உன் பூ முகம் காண
மீண்டும் ஜனனிப்பேன்,
பூக்களாய் மலர்ந்தாலும்
மாலையிட நான் வருவேன்,
தாமரைப்பூ தடாகத்தில் விட்டு
தாலியையும் கட்டிடுவேன்,
தாமரையிலையில் தண்ணீராய்
உனக்குள்ளே தடம் புரல்வேன்......

7

பிறந்து விட்டாய் பெண்ணாக..
பூமியிலே எனக்காக,
செவ்விதழ் வாயோடு,
செதுக்கி வைத்த சிலையாக,
சிற்பமா..? சித்திரமா..?
நீ..........
சித்தரிக்கும் காவியமா..?
கண்டு கண்டு ரசிக்கின்றேன்,
காலத்தை ஜெயிக்கின்றேன்....


6

எனக்காகப் பிறந்தவளே,
என் தேனிலவே...!
இதயத்தில் ஒளிரும்
பால் முகமே..!
தேன் வடியும்
செவ்விதழில்
என்னைப் புரட்டுகின்ற
புன்னகையே..!
கூடி வாடி
ஜோடி சேர்வோம்,
கோடி ஆயுள்
தேடி வாழ்வோம்.......
                                                                                  5
 
ஆயிரம் மின் விளக்குகள்
உன் கண்ணொளியிலே,
பௌர்ணமி நிலவொளியோ,
உன் முக அழகினிலே...
தேன்துளியாய் வார்த்தைகள்
இனிக்கும் என் நெஞ்சினிலே
அன்பே..!
உன் அன்பு மட்டும் போதுமடி(டா)
ஆயுள் நூறு வாழ்வதற்கு,
அழகு முகம் போதுமடி(டா)
அப்படியே நான் உறைவதற்கு....

                                                                           4


என்னை நோக்கிய இளம் தென்றல்
இதமாய் இதயம் நுழைந்ததினால்,
இன்னிசை ராகம்
எனக்குள் ஒலிக்கின்றது....
உயிரின் தேடல்
மெல்லக் குறைந்து
அன்பு வெள்ளம் பெருகின்றது..
அன்பே..!
உன்னைக் கண்டபின்பு
காதல் வந்து துளிர்கின்றது.
                                                                                3
                                     
கண்களில் கரைந்து,
மனதினுள் இணைந்து,
உணர்புகள் படிந்து,
உயிரினில் சுரந்து,
மூச்சிக்காற்றில்
முழுமையாய் நிறந்து,
சுவாசப் பையினில்
ஓடி நீந்தி,
உயிரின் அணுக்களை
மெல்ல உடைத்து,
துளிர் விட்டு வளரும்
அன்புச்செடி,
காதல்.

                                                                                2

சாய உதட்டில்
காயமூட்டி
சூடான இதழில்
குளிர் பாச்சி
இணைந்து கொண்ட முத்தங்கள்...
ஆசைகள் கூடி
மூடிய கண்கள்
கோடான கோடி
ஞாபகங்கள் தாண்டி
உதடுகள் விரித்து
வாங்கிய மூச்சி
உயிரின் சலனத்தை
உலுப்பியே போச்சி...
மகிழ்ந்து நின்ற உதடுகளே..!
மனமாறாக் கனவுகளே..!
உலராத முத்தங்களாய்
உள்ளங்கள் கொளுங்கள்.

                                                                              1
நீ.......
காட்டிக் கொண்ட அன்பினால்
நான்,
மூட்டிக் கொண்டேன் காதலை,
துளிர் விட்டெழுந்தது
கதிர் விடும் சூரியனாய்...
பெண்ணே..!
நிலவொளியின் சுடரொளியாய்
உனக்காகத்தான் வாழ்கின்றேன்,
ஒன்று சேரத்தன் துடிக்கின்றேன்.
ஓடி வந்து விடு
கூடி வாழத்தான்....



- - -என் மனதில் மலர்ந்த கவிமலர்களைச்  படித்துச் சூடிய அன்புள்ளங்கள் அனைவருக்கும்  என் இதயம் கலந்த நன்றிகள்- - -

என்றும் அன்புடன் இதயப்ரியன் ராஜூ
- - - - -Raju- - - - -

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS