இன்றும் நினைவிருக்கின்றது
என்றோ ஒரு நாள்
அவள் பார்த்த பார்வை
முடியவில்லை என்னால்
மூடிக் கொண்டேன் கண்ணை
விடவில்லை பார்வை
துரத்தியது என்னை
இருவிழியும் கத்தி கொண்டு.
மதிமயங்கி நின்ற வேளை
காதோரம் வந்தது செய்தி.
உள்ளுக்குள் சிரித்தது
என் உணர்வினில் பாதி
உயிரினுள் ஊடறுத்து
இதயத்தில் பாய்விரித்தது
அவளின் முழுநிலாக் காதல்.
என்னையே நானறியாது
எங்கோ பார்த்து நிற்க
ஏப்பம் சொன்னது
இவள்தான் அவளென்று.
சட்டென்று மின் வெட்டு
எனக்குள்ளே தென்பட்டு
பகலொன்றை இருளாக்கி
ஒளிர்ந்தது அவள் விழிகள்.
விழிகளின் ஒளியில்
புலர்ந்தது எனதுலகம்,
தனிமையின் அருகில்
தவழ்ந்தது புது உலகம்.
என்றோ ஒரு நாள்
அவள் பார்த்த பார்வை
முடியவில்லை என்னால்
மூடிக் கொண்டேன் கண்ணை
விடவில்லை பார்வை
துரத்தியது என்னை
இருவிழியும் கத்தி கொண்டு.
மதிமயங்கி நின்ற வேளை
காதோரம் வந்தது செய்தி.
உள்ளுக்குள் சிரித்தது
என் உணர்வினில் பாதி
உயிரினுள் ஊடறுத்து
இதயத்தில் பாய்விரித்தது
அவளின் முழுநிலாக் காதல்.
என்னையே நானறியாது
எங்கோ பார்த்து நிற்க
ஏப்பம் சொன்னது
இவள்தான் அவளென்று.
சட்டென்று மின் வெட்டு
எனக்குள்ளே தென்பட்டு
பகலொன்றை இருளாக்கி
ஒளிர்ந்தது அவள் விழிகள்.
விழிகளின் ஒளியில்
புலர்ந்தது எனதுலகம்,
தனிமையின் அருகில்
தவழ்ந்தது புது உலகம்.