37.காதல் இல்லாப் பூமிவேண்டும்

நானும்,
காதலிக்க வேண்டுமென்று
கருவிலே தெரிந்திருந்தால்
தாய் மடியிலே சிதைந்திருப்பேன்,
யார் மனதையும் புண்படுத்தாது......

புரியாமல் தெரியாமல் பிறந்து விட்டேன்
பூமியில் காதல் கொடியதென்று.
அழுத கண்கள்
காதல் கதை பேசையிலே,
துடைத்த கைக்குட்டைகள்
இன்னும் ஈரம் உலரவில்லை.

இதயத்தில் இடம் கொடுத்தேன்
இரண்டாக கிழித்தது,
இமைகளில் இடம் கொடுத்தேன்
கண்களிலே குத்தியது.

காயங்கள் ஆறவில்லை
இன்னும் ஈக்கள் மொய்க்கின்றது.
காதல், புண்படுத்தி சென்றதனால்
புகையும் கண்களில் தைக்கின்றது.

போதை தந்த வழியில்- நான்
மறு ஜென்மம் தேடுகின்றேன்,
காதல் இல்லாப் பூமியினை.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS