கருவறையில் நிமிர்ந்த நான்
கருவிழியில் கவிழ்ந்து விட்டேன்,
கார்மேகக் கூந்தலிலும்
காதலையும் படர விட்டேன்.
தொலைந்து விட்டேன் நான்-உனக்குள்
தேடிப் பார் என்னை.
தொலைதூரம் செல்லவில்லை,
தொட்டிலிட்டுத் தாலாட்டு நினைவை.
தொப்புள்கொடி உறவில்
பிள்ளையாகப் பிறந்து விட்டேன்.
சொந்தம் ஒன்றைத் தேடிக் கொள்ள
நானும் உன்னை நாடிக் கொண்டேன்.
பகல்வேளை நிலவே..!
பவனி வரும் தேரே...!
நேசம் கொண்டேன் உன்னை,
ஏற்றுக்கொள்வாயா என்னை?
உனக்கு............
கண்ணதாசன் விட்டுச் சென்ற
கற்பனையைச் சேர்த்தெடுப்பேன்.
வைரமுத்து வாக்கியத்தில்
வகை வகையாய் பா உரைப்பேன்.
கருவிழியில் கவிழ்ந்து விட்டேன்,
கார்மேகக் கூந்தலிலும்
காதலையும் படர விட்டேன்.
தொலைந்து விட்டேன் நான்-உனக்குள்
தேடிப் பார் என்னை.
தொலைதூரம் செல்லவில்லை,
தொட்டிலிட்டுத் தாலாட்டு நினைவை.
தொப்புள்கொடி உறவில்
பிள்ளையாகப் பிறந்து விட்டேன்.
சொந்தம் ஒன்றைத் தேடிக் கொள்ள
நானும் உன்னை நாடிக் கொண்டேன்.
பகல்வேளை நிலவே..!
பவனி வரும் தேரே...!
நேசம் கொண்டேன் உன்னை,
ஏற்றுக்கொள்வாயா என்னை?
உனக்கு............
கண்ணதாசன் விட்டுச் சென்ற
கற்பனையைச் சேர்த்தெடுப்பேன்.
வைரமுத்து வாக்கியத்தில்
வகை வகையாய் பா உரைப்பேன்.