21. காதல் மனது

புன்னகை சிந்தும் பூமுகத்தில்
மொட்டு விரிந்த செவ்விதழில்
தொட்டுப் பேசிய ஞாபகங்கள்
விட்டுப் போக மறுக்குதடி.

இளம் காற்று வீசையிலே
இன்பங்கள் வந்து மோதியிலே
கிள்ளிப் பேசிய கன்னங்கள்
கள்ளி முள்ளாய்க் குத்துதடி.

வியர்வையின் வேகத்தை
தடை போட்ட முகப் பருக்கள்
கண்ணீரை மட்டுமேனோ..?
விரும்பி இன்று அழைக்கின்றது

முன்னாடி வந்து நின்று
முட்ட அழைக்கும் மூக்குநுனி
மூன்றாப் பிறையாய்
வளையுண்டு போகுதடி

கண்ணுக்குளே காதல் வைத்து
கண்ணடித்துப் பேசியதால்
கண்ணீரில் தான்
என் கண்மணிகள் கரையுதடி.........


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS