25. வேண்டாம் தாசி வீடு.

நண்பனே...!
ஏசி(AC) பொருத்திய
தாசி வீட்டுக்குச் சென்று
காசி கொடுத்து
மின்விளக்கு அணைக்கின்ற நீ,
ஏனடா..?
இருட்டில் அமர்ந்து
கண்கலங்கும் விதவை வீட்டில்
குப்பி விளக்கு ஏற்ற மறுக்கின்றாய்.

மின்சாரம் நின்றுவிட்டால் - நீ
அணைக்கத்தான் விளக்கேது...?
மின் மினிப் பூச்சிக்கு
மின்சாரம் அங்கேது..?

சுடுமணலில் விழுந்த புழுவுக்கு
சுடுதண்ணி ஊற்றலாமா..?
சுடுகாட்டுப் பேயத்தான்
ஊருக்குள் அழைக்கலாமா..?

தெருவோரம் பூத்திருக்கும்
மூலிகைச்செடி
நீயோ...!
தெருநாயாய் அலைகின்றாய்
வினையைத்தேடி...........

பாலைவனப் பட்டாம் பூச்சியாய்
வெள்ளைச் சேலையில் ஒருத்தி,
பார்வையற்று செல்கின்றாய்
பளிங்குயறை தேடி...........

நண்பா....!
விலை கொடுத்து வாங்கும்
வியாதிக்குப் பதிலாக
விலை மதியா அன்பை நீ தேடு,
விஸ்த்திர மனிதனில் ஒருவனாய்
பூமியில் நீயும் வாழ்ந்திடு.,
விதவைக்கும் வாழ்வுகொடு
விடிவொன்றைக் காட்டிவிடு.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS