புரிந்து கொள்வாய் என்றுதான்
பிரிந்து சென்றேன்,
பாலை வானக் குயிலாய் - நீ
பருதவிப்பாய் என அறியாமல்.
நீயும், நானும் எதிரெதிர் திசையில்
ஏங்கியெங்கித் தவிக்கையிலே
நினைவுகள் இடையிடையே
கனவுகள் வந்து மறைக்கின்றதே....
நீயோ..............!
தாடிவைத்துக் காட்டுகின்றாய்
உன் சோகத்தை,...
மூடிவைத்து தவிக்கின்றேன்
எனது தாக்கத்தை...
விலக்கிச் சென்ற என் காதலனே..!
கட்டிய கணவனோடு
கட்டிலறை சென்றாலும்
ஊஞ்சல் கட்டியாடுதடா
உன் நினைவு.
மழைக்கு முன் வந்து
நிலையில்லாது போகும்
வானவில்லாய் அல்ல என் காதல்.
நிலையாய் இருக்கும் வானம் போன்றது.
உன்னை மறக்க முடியாமல்
நான் தவிப்பதை உணர்வாயா...?
மனதுக்குள் சிறையிருக்கும்
உன் நினைவைத்தான் அறிவாயா..?
பெண்ணுக்கும் உண்டடா
புண்ணாகும் இதயம்
புகைவிட்டு ஆற்றத்தான்
முடியாது எதையும்.
உறவுகள் கொடுத்தது
காதலுக்கு தூக்கு கயிறு
தினம்தினம் போகின்றது
உன் நினைவுகளில் என் உயிரு( உயிர்)
உன்னை விட்டு மணந்து விட்டேன்
மன்னித்துவிடு என்னை
மறக்க முடியாத காதலனே..!
மணந்து விடு நீயொரு பெண்ணை..............
பிரிந்து சென்றேன்,
பாலை வானக் குயிலாய் - நீ
பருதவிப்பாய் என அறியாமல்.
நீயும், நானும் எதிரெதிர் திசையில்
ஏங்கியெங்கித் தவிக்கையிலே
நினைவுகள் இடையிடையே
கனவுகள் வந்து மறைக்கின்றதே....
நீயோ..............!
தாடிவைத்துக் காட்டுகின்றாய்
உன் சோகத்தை,...
மூடிவைத்து தவிக்கின்றேன்
எனது தாக்கத்தை...
விலக்கிச் சென்ற என் காதலனே..!
கட்டிய கணவனோடு
கட்டிலறை சென்றாலும்
ஊஞ்சல் கட்டியாடுதடா
உன் நினைவு.
மழைக்கு முன் வந்து
நிலையில்லாது போகும்
வானவில்லாய் அல்ல என் காதல்.
நிலையாய் இருக்கும் வானம் போன்றது.
உன்னை மறக்க முடியாமல்
நான் தவிப்பதை உணர்வாயா...?
மனதுக்குள் சிறையிருக்கும்
உன் நினைவைத்தான் அறிவாயா..?
பெண்ணுக்கும் உண்டடா
புண்ணாகும் இதயம்
புகைவிட்டு ஆற்றத்தான்
முடியாது எதையும்.
உறவுகள் கொடுத்தது
காதலுக்கு தூக்கு கயிறு
தினம்தினம் போகின்றது
உன் நினைவுகளில் என் உயிரு( உயிர்)
உன்னை விட்டு மணந்து விட்டேன்
மன்னித்துவிடு என்னை
மறக்க முடியாத காதலனே..!
மணந்து விடு நீயொரு பெண்ணை..............