கனவிலும் நினைத்ததில்லை
துரோகம் செய்வாய் என்று.
தரிசி நிலமாய்
வரண்டு போன
என் இதழ்கள்
ஈரமின்றி தவித்திருக்க,
ஈவிரக்கமின்றி
யாருக்கு கொடுக்கின்றாய்
உதட்டு முத்தம்.
துரோகம் செய்வாய் என்று.
தரிசி நிலமாய்
வரண்டு போன
என் இதழ்கள்
ஈரமின்றி தவித்திருக்க,
ஈவிரக்கமின்றி
யாருக்கு கொடுக்கின்றாய்
உதட்டு முத்தம்.
பனிவிழும் இரவில்
தவழ்ந்து வரும் குளிரில்
தேகம் தொடும் வெயிலில்
தேடி வரும் அனலில்
அள்ளிக் குவிந்த சோகங்களோடு
தள்ளியிருந்து கேட்கின்றேன்,
உண்மையைச் சொல்லிவிடு
நீ காதலிப்பது என்னையையா..?
இல்லை........
உன் வீட்டு கண்ணாடியையா..?
இரசம் போன கண்ணாடியில்
இரகசியமாய் தெரிகின்றேனா..?
என்னை விட
கண்ணாடியைத்தான்
அதிகம் பார்க்கின்றாய்.