நிலவு தூங்கும் நேரம் பார்த்து
விழித்துக் கொண்ட விழிகள் இன்று
இமைகளைத் திறந்து கொண்டே
தூக்கத்தை அழைக்கின்றது.
அறியாத வயதினிலே
புரியாது செய்த காதல்
அருவியாய் தானே
கண்களில் பிறக்கின்றது.
கரு விழிகள் சிவந்து
கதி காலங்கி நிற்கையிலே
இடி வந்து வீழ்ந்தது
என் இதயத்தினிலே
மழையாய் வந்து நனைக்கின்றாய்
முக மூடி அணிந்து கொண்டு,
கையேந்தி அழைக்கின்றேன்
மனதைத் திறந்து கொண்டு.
நீரோடு கரைகின்றது
கண்ணீர் உப்பு
நினைவாய் வந்த போதும்
தெரியவில்லை காதல் மப்பு.
சித்தன் வேடத்தில் அலையும்
பித்தன் நான்.......
ஏன்.?
காதலின் கால்கள் உடைந்த பின்பும்
நினைவுகள் தவழ்கின்றது.
உன் பின்னால்..............
விழித்துக் கொண்ட விழிகள் இன்று
இமைகளைத் திறந்து கொண்டே
தூக்கத்தை அழைக்கின்றது.
அறியாத வயதினிலே
புரியாது செய்த காதல்
அருவியாய் தானே
கண்களில் பிறக்கின்றது.
கரு விழிகள் சிவந்து
கதி காலங்கி நிற்கையிலே
இடி வந்து வீழ்ந்தது
என் இதயத்தினிலே
மழையாய் வந்து நனைக்கின்றாய்
முக மூடி அணிந்து கொண்டு,
கையேந்தி அழைக்கின்றேன்
மனதைத் திறந்து கொண்டு.
நீரோடு கரைகின்றது
கண்ணீர் உப்பு
நினைவாய் வந்த போதும்
தெரியவில்லை காதல் மப்பு.
சித்தன் வேடத்தில் அலையும்
பித்தன் நான்.......
ஏன்.?
காதலின் கால்கள் உடைந்த பின்பும்
நினைவுகள் தவழ்கின்றது.
உன் பின்னால்..............