33. கனவுக் காதலி


வாழவேண்டும் நீயும் நானும்
வானும் நிலவுமாக...
வசந்தம் கூடி உலாவ வேண்டும்
ஓடும் தேர் போல

ஊசலாடும் உயிரைக் கொண்டு
நாம் வாழவேண்டும்
ஊஞ்சல் கட்டும் காதல்
சிகரம் தொட வேண்டும்

சித்திரமே நீ பத்திரமாய்
என் நித்திரையில் இனிக்கின்றாய்.,
தூக்கம் கெட்டுப் போகையிலே
கண்முன்னே ஜொலிக்கின்றாய்.

நிஜத்தில் நானும்
நினைவில் நீயும்
ஒன்றாய் வாழ்கின்றோம் நினைவோடு.

மொட்டை மாடியில் வெட்டை வெயிலில்
கட்டைப் பிணமாய் நான்,
உச்ச வானில் கொட்டும் நிலவாய்
தொட்டுப் பேசுகின்றாய் நீ........

தாரகைக் கூட்டத்தில்
மேனகை ஆனாலும்
மேவும் மூச்சுக் காற்று
மெல்லத்தான் தடவுகின்றது.
சொல்லாமல் வந்து
என்னைத்தான் தாவுகின்றது.

இமைக்கும் பொழுதில் இணைந்து கொள்ள
என்னவளே வந்து விடடி.....
நினைக்கும் போதெல்லாம் முத்தங்கள் தந்து விடடி......

ஆசை கொள்கின்றேன் உன் மேலே,
அன்பே நானும் தன்னாலே...........



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS