12.காதல் முத்தம்

நிலவொளிக்கு ஓரம் சாயும்
மரநிழல்கள்,
மௌனமாய் ஒலியெழுப்பும்
சருகிலைகள்.

மறைவாக காதலர்கள்
நாமிருவர்,
மரநிழலில் அருந்தும்
தேனிக்கள்.

அன்பின் துடிப்பில்
அணைக்கும் ஆசைகள்.
புரியாத பாசையில்
புலம்பும் ஓசைகள்.

இதயங்கள் துடிக்கும்
இன்னிசை ராகங்கள்
இமைகள் அருந்தும்
இன்ப பாணங்கள்.

காதல் முத்தம்
உதட்டினில் நித்தம்,
அத்தனையும் இங்கு
மௌன சத்தம்.

இன்பத்தின் தேடல்
உதட்டினிலே,
அதுவும் இன்று
மறைவினிலே......



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS